;
Athirady Tamil News

கடற்படை பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமனம்

0

இலங்கை கடற்படையின் புதிய பிரதம அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட(Kanchana Banagoda) முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்(Ranil Wickremesinghe) நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனமானது (26.08.2024) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் கடற்படை தலைமையகத்தில் உத்தியோகப்பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை
2024 ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவரது நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க இப்பதவியை வகித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.