;
Athirady Tamil News

வெளிநாட்டு பணியாளர்களுக்கு சர்வதேச வங்கிக் கணக்கு: எந்த நாட்டில் தெரியுமா..!

0

தொழில் நிமித்தமாக மத்திய கிழக்கு நாடான பஹ்ரைன் (Bahrain) விமான நிலையங்களுக்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் சர்வதேச வங்கிக் கணக்கை வழங்க அந்நாட்டு தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான தகவலை இலங்கை (Sri lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, குறித்த திட்டம் இம்மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலதிக தகவல்கள்
இதேவேளை, சரியான பணப் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இது தொடர்பான தகவல்களை பஹ்ரைனின் தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (LMRA) www.lmra.gov.bh என்ற இணையதளத்திற்குச் சென்று 00973-17506055 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும்.

அத்தோடு, வெளிநாட்டுப் பணியாளர்கள் பஹ்ரைனுக்குள் நுழையும் போது ,விமான நிலையத்தில் வைத்து இந்த சர்வதேச வங்கிக் கணக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் ஆலோசனைகளையும் அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.