;
Athirady Tamil News

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு!

0

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் குழு மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு குழுவும் நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

கண்காணிப்பு நடவடிக்கை
குறித்த குழுக்கள் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கோரிக்கைகளை பரிசீலித்து இந்த குழுக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்​கைகளை முன்னெடுப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகளும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.