;
Athirady Tamil News

கடவுச்சீட்டுக்காக கால்கடுக்க காத்திருக்கும் மக்கள்!

0

இலங்கையில் கடவுச்சீட்டுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு விநியோகம் தாமதமடைந்துள்ள நிலையில் கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், கடவுச் சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களுக்கு முன்பாகவும் மக்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை நாளாந்தம் 1,000 கடவுச்சீட்டுக்களை மாத்திரம் விநியோகிப்பதற்கு குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.