;
Athirady Tamil News

கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து விபத்து: ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

அம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

தங்காலை அணைக்கட்டு பகுதியில் இன்று (30) அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்காலை அணைக்கட்டு பாலத்தில் பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரணை
இதேவேளை, விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கை,கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.