;
Athirady Tamil News

யாழில் பரிதாபதாக உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்: வெளியான காரணம்

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) திடீர் சுகவீனத்தால் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (30) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமை புரியும் பெரியசாமி திவாகரன் என்ற காவல்துறை உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு நேற்றுமுன்தினம் (29) இரத்த வாந்தி ஏற்பட்டது. இதனால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

ஈரலில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.