;
Athirady Tamil News

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் ஆணொருவரின் சடலம்

0

கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாரங்விட பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் நேற்று (30) மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
சடலமாக மீட்கப்பட்டவர் 65 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் இவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.