;
Athirady Tamil News

Order Cancel செய்தும் 2 வருடங்கள் கழித்து டெலிவரியான பிரஷர் குக்கர்

0

ஓன்லைனில் ஓர்டர் செய்த பிரஷர் குக்கரை ரத்து செய்த பின்னரும் இரண்டு ஆண்டுகள் கழித்து டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய காலத்தில் நாம் என்ன பொருள் வாங்க வேண்டும் என்றாலும் கடைக்கு சென்று வாங்க வேண்டிய என்ற அவசியம் இல்லை. அதற்கு பிரத்யேகமான பல்வேறு ஓன்லைன் வணிக தளங்கள் உள்ளன. அ

தில் நாம் ஓர்டர் செய்தாலே ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நம் வீட்டிற்கே வந்து கொடுத்துவிட்டு செல்வார்கள். அந்த அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், இங்கு நபர் ஒருவர் ஓர்டர் செய்த பொருள் இரண்டு ஆண்டுகள் கழித்து டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

2 வருடங்கள் கழித்து டெலிவரி
ஜெய் என்ற பெயருடைய நபர் ஒருவர் அமேசான் தளத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக பிரஷர் குக்கரை ஓர்டர் செய்துள்ளார். பின்னர் அந்த ஓர்டரை ரத்து செய்துவிட்டு அதற்கான பணத்தையும் திரும்ப பெற்றுள்ளார்.

ஆனால், தற்போது அவர் ஓர்டர் செய்த பொருள் இரண்டு ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு வந்துள்ளது.

இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “2 ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஓர்டரை வழங்கியதற்கு நன்றி அமேசான்” என்று கூறியுள்ளார்.

அதாவது அந்த நபர், கடந்த 2022 -ம் ஆண்டு ஒக்டோபர் 1 -ம் திகதி ஓர்டர் செய்துள்ளார். அந்த ஓர்டரை 2024 -ம் ஆண்டு ஆகஸ்ட் 28 -ம் திகதி பெற்றுள்ளார். மேலும், இது மிகவும் சிறப்பான பிரஷர் குக்கராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.