;
Athirady Tamil News

பேருந்து கட்டண திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு !

0

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில், “குறிப்பிட்ட விலைச் சூத்திரத்தின் அடிப்படையில் பேருந்து கட்டணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

எரிபொருள் விலை
10 ரூபாவினால் எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறைப்பு பேருந்து கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றத்திற்கு போதுமானது அல்ல.

பேருந்து கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்றால் எரிபொருளின் விலை 25 ரூபாவினால் சரி குறைக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.