;
Athirady Tamil News

ஆடை தொழிற்சாலை பெண்கள் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

0

மஹியங்கனை ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் 25 பெண்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (30) இரவு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகயீனமடைந்தவர்கள் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக பெண்கள் இவ்வாறு சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.