;
Athirady Tamil News

மத்திய வங்கி ஆளுநரின் கருத்து நியாயமற்றது: அநுர தரப்பு சாடல்

0

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் பொருளாதார சீர்திருத்தம் தொடர்பிலான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வெளியிடுவதற்கு உரிமையில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தேசிய பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல் அறிவிப்பு
“தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இவ்வாறான அரசியல் அறிக்கையை வெளியிடுவதற்கு மத்திய வங்கி ஆளுநருக்கு உரிமை இல்லை.

இதுபோன்ற அறிக்கை தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். மறுபுறம், நாட்டை அபாயகரமான பொருளாதாரத்தில் சிக்க வைத்த ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைக்கக் கூடாது என மத்திய வங்கி ஆளுநர் கூறுகிறார்.

நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்
அவ்வாறெனில் அந்த இரக்கக் கனவில் இருந்து நாட்டை விடுவிக்கக்கூடிய ஒரு குழுவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும்.

அதன்படி, சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து சுட்டிக்காட்டியபடி, ஊழலைத் தடுத்து, நாட்டின் வருமானச் செலவுகளை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தும் தேசிய மக்கள் சக்தியிடம் நாட்டை ஒப்படைப்பதே பொருளாதார அபாயத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற ஒரே வழி.

ஏனென்றால், ஊழலைத் தடுக்க தற்போது சட்டங்கள் உள்ளன, ஆனால் அவை செயல்படுத்தப்படவில்லை.

நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு யார் காரணம் என்றும் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாயின் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையக் கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளதாக நான் கருதுகின்றேன்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.