;
Athirady Tamil News

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் உயிரிழந்து கிடந்த 3 குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவர்: விசாரணை தீவிரம்!

0

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் இருந்து 3 குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் அதிர்ச்சி
சனிக்கிழமை மதியம் 1.15 மணி அளவில் Staines-upon-Thames-ல் பிரேமர் சாலையில் உள்ள சொத்து ஒன்றுக்கு பொலிஸார் தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவையால் அழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில், 3 குழந்தைகள் மற்றும் ஆண் ஒருவர் ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விசாரணையில் அவர்கள் உயிரிழந்ததற்கான சூழ்நிலையை ஆராய்ந்து வருவதாக சர்ரே பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட சம்பவம்
மேலும் இந்த சம்பவம் தனிப்பட்ட சம்பவமாக இருக்கலாம், 3வது நபரின் தலையீடு இல்லை என்று நம்பப்படுகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Bremer சாலையில் மூடப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.