;
Athirady Tamil News

பாணந்துறையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலம்

0

பாணந்துறை கற்கரையில் கரையொதுங்கிய 15 அடி நீளமுடைய திமிங்கிலமொன்று இன்று (03) காலை உயிரிழந்துள்ளதாக பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2 ஆயிரம் கிலோ நிறையுடைய இந்த திமிங்கிலம் கரையொதுங்கிய சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த திமிங்கிலத்தின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்திட்டிய வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.