;
Athirady Tamil News

நான்தான் டயானாவின் மறுபிறவி என கூறிக்கொள்ளும் நபர்: ஒரு சுவாரஸ்ய தகவல்

0

நான்தான் டயானாவின் மறுபிறவி என கூறிக்கொள்ளுகிறார் ஒருவர். வேடிக்கை என்னவென்றால், அப்படிச் சொல்வது ஒரு பெண் அல்ல, ஒரு சிறுவன்!

டயானாவின் மறுபிறவி என கூறிக்கொள்ளும் சிறுவன்
1997ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31ஆம் திகதி, தன் காதலருடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது பாரீஸில் விபத்தொன்றில் பலியானார் இளவரசி டயானா.

ஆனால், இன்று வரை அவரைக் குறித்த செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.

தற்போது, அவுஸ்திரேலியாவில் வாழும் பில்லி (Billy Campbell) என்னும் 8 வயது சிறுவன் ஒருவன், நான்தான் டயானாவின் மறுபிறவி என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.

யார் அந்தச் சிறுவன்?

பிரபல பாடகர், நடிகர் மற்றும் தொலைக்காட்சி பிரபலமான டேவிட் (David Campbell) என்பவரது மகன்தான் இந்த பில்லி.

பில்லிக்கு இரண்டு வயது இருக்கும்போது, ஒருநாள், நான்தான் டயானாவின் மறுபிறவி என கூறியிருக்கிறான்.

தங்கள் மகன், அந்த வயதிலேயே டயானா தொடர்பான சில விடயங்களை தெளிவாக குறிப்பிடுவதைக் கண்ட பில்லியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

பிரித்தானிய ராஜ குடும்பத்துக்குச் சொந்தமான, ஸ்கொட்லாந்திலிருக்கும் பால்மோரல் மாளிகை குறித்தும், டயானாவின் கார் விபத்து குறித்தும் தெளிவாக விவரித்திருக்கிறான் பில்லி.

இளவரசி டயானாவின் படம் ஒன்றைப் பார்த்தபோது, அது நான்தான், இளவரசி டயானாவாக இருந்தபோது எடுத்த படம் அது என்று கூறிய பில்லி, ஒருநாள் சைரன் ஒலி கேட்டது, அதற்குப் பிறகு நான் இளவரசியாக இருக்கவில்லை என்று கூறி அதிரவைத்துள்ளான்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.