;
Athirady Tamil News

நூடுல்ஸ்தான் வேண்டும்; சிறையில் அடாவடி செய்த சஞ்சய் ராய் – நாட்டை உலுக்கிய கொடூரம்!

0

சஞ்சய் ராய், சிறையில் வழங்கப்படும் உணவில் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மருத்துவர் கொலை
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் நிரபராதி என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், செமினார் ஹாலுக்குள் நுழைந்தபோது அந்தப் பெண் சுயநினைவின்றி இருந்தார். சம்பவத்தன்று அந்த அறைக்குள் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனால் பீதியுடன் அறையை விட்டு வெளியேறிவிட்டேன்.

சிறையில் அடாவடி
இதில்தான் புளூடூத் ஹெட்செட் விழுந்து இருக்கும் என்றுத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறை சாலையில் வழங்கப்பட்ட ரொட்டி-சப்ஜி உணவு பிடிக்கவில்லை. அதற்கு பதிலாக முட்டை வழங்க வேண்டும். நூடுல்ஸ் வழங்க வேண்டும்.

சைனீஸ் உணவுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். சிறை விதிகளின்படி, அனைத்து கைதிகளும் ஒன்றாக தயாரிக்கப்படும் உணவையே சாப்பிட வேண்டும். எனவே அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.