;
Athirady Tamil News

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி மூன்றாம் காலாண்டுக்கான கூட்டம்

0

சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர்கள், வங்கிப் பணி குழு மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கான மூன்றாம் காலாண்டுக்கான கூட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி அவர்களின் தலைமையில் நேற்று (03) நடுத்தீவு சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

செயற்றிட்டங்கள்
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வருகின்ற மூன்று சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும், எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்க இருக்கின்ற செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இக்கூட்டத்தில் சமுர்த்தி தலைமை முகாமையாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையளர், சமுர்த்தி வங்கி முகாமையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவள அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மூன்று வங்கிச்சங்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.