;
Athirady Tamil News

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூடு.. 9 நக்சலைட்டுகள் பலி – சத்தீஸ்கரில் பரபரப்பு!

0

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தார், ​​தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாகத் தகவல் வெளியானது .இந்தத் தகவலையடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, இன்று காலை 10.30 மணியளவில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கு இடையே துப்பாக்கி சூடு நடந்தது.அதில், ஒன்பது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு
மேலும், நக்சலைட்டுகளுக்கிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை . தொடர்ந்து நக்சல்களிடம் இருந்து ஏராளமான எஸ்எல்ஆர் துப்பாக்கிகள், 303 ரைபிள்கள் மற்றும் 315 போர் ரைபிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அப்பகுதியில், இன்னும் பிற நக்சலைட்டுகள் இருக்கிறார்களா என்று பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.