;
Athirady Tamil News

சங்கானையில் ஒரு இரவில் மூன்று வீட்டில் கொள்ளை

0

யாழ்ப்பாணம் – சங்கானை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைத்து , பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சங்கானை தேவாலய வீதியில் உள்ள மூன்று வீடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் , கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என பெயர் குறிப்பிட்டு சந்தேக நபர் ஒருவர் தொடர்பிலான தகவல்களையும் பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.