;
Athirady Tamil News

தமிழரசின் முடிவால் தமிழ் பொது வேட்பாளருக்கு பாதிப்பில்லை

0

தமிழரசு கட்சி அறிவித்த முடிவினால் , தமிழ் பொது வேட்பாளரின் வாக்கில் தாக்கம் இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்

தமிழரசு கட்சியினர் முழுமையாக சஜித் பிரேமதசாவிற்கு ஆதரவு வழங்கவில்லை. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தற்போதும் தமிழ் பொது வேட்பாளருக்கே தனது ஆதரவை தெரிவித்து வருகின்றார்

தமிழரசு கட்சியின் புதிய தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் நாட்டுக்கு வந்து கட்சியினருடன் பேசி முடிவெடுப்பார் . அது அவர்களின் உட்கட்சி பிரச்சனை என்பதனால் , நாம் அது பற்றி பேச முடியாது

பல கட்சிகள் ஒன்றாக ஒன்றிணைத்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறோம். தமிழரசு கட்சியினர் சஜித்துக்கு ஆதரவு என தெரிவித்துள்ளமை , தமிழ் பொது வேட்பாளரின் வாக்கில் தாக்கல் செலுத்தாது என தெரிவித்தார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.