;
Athirady Tamil News

கென்யாவில் பாடசாலையொன்றில் தீ விபத்து : 17 மாணவர்கள் பலி

0

கென்யாவின் (Kenya) – நெய்ரி நகரில் உள்ள பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தீ விபத்தானது நேற்று முன் தினம் (05.09.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெய்ரியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா (Hillside Endarasha Academy) என்ற ஆரம்பப் பாடசாலையொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

விசாரணைகள்
இந்த தீ விபத்தில் 17 மாணவர்கள் தீயில் உடல் கருகி உயிரிழந்ததுடன், 13 மாணவர்கள் பலத்த காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.