;
Athirady Tamil News

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : புடின் அறிவிப்பு

0

உக்ரைனுடன் (Ukraine) பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடங்கியது.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா (America) இருந்து வருவதால் இந்த போர் மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

பொருளதார நெருக்கடி
இதனால், சர்வதேச அளவிலும் பல்வேறு பொருளதார நெருக்கடி நிலவி வருகின்ற நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று புதின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக புடின் மேலும் தெரிவிக்கையில், “இந்தியா (India), சீனா (China) மற்றும் பிரேசில் (Brazil) போன்ற நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடுகளுக்கு ரஷ்யா மதிப்பளிக்கிறது.

உக்ரைன் போர் தொடர்பாக இந்த நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளேன்.

பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உக்ரைன் விரும்பினால் நான் தயாராக இருக்கிறேன்.

இதற்கு, இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.