;
Athirady Tamil News

தொடர்ந்து 7 நாட்கள் ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் உடலில் உண்டாகும் மாற்றம் என்ன?

0

நமது உடலை வலிமையாக வைத்துக்கொள்ள நாம் பல உணவுகளை கட்டாயமாக உண்ண வேண்டும்.

இப்படி சாப்பிடும் போது தான் நாம் அன்றாட வேலைகள் செய்வதற்கு நமது உடலில் சக்தி இருக்கும்.

தற்போது மக்கள், ப்ரோடீன் நிறைந்த உணவுகளை தங்களின் தசை வளர்ச்சிக்காக எடுத்துக்கொள்கிறார்கள். பலர் ப்ரோடீன் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால் தற்போது இருக்கும் இயற்கை உணவில் அதிக ப்ரோடீன் உள்ளது. மேலும், இவற்றை சாப்பிடுவதால் மல்யுத்த வீரர் போன்ற வலிமையை உடலுக்கு கொண்டு வரும்.

சிறிய பாதாம் பருப்பில் அதிக அளவு ப்ரோடீன் உள்ளது என்பது பலருக்கும் தெதரியாது. இது மிகவும் சக்திவாய்ந்த உலர் பழம் ஆகும், இது உங்கள் தசைகளை மிகவும் வலிமையாக்கும். இதை தொடர்ந்து ஊழு நாட்கள் சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஊறவைத்த பாதாம்
பாதாமில் அதிகளவிலான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே நாம் தினமும் குறைந்தது ஒரு நாளைக்கு 5 முதல் 10 பாதாம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து அதனை மறுநாள் சாப்பிட்டு வருதல் வேண்டும்.

இதனால் உடலுக்கு நிறைவான அளவு ப்ரோடீன் கிடைக்கும். அதாவது 35 கிராம் பாதாம் பருப்பில் 7 கிராம் ப்ரோடீன் இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது ஒரு நபரின் தினசரி ப்ரோடீன் தேவைகளில் 10% அதிகமாகும். பாதாம் பருப்பில் ப்ரோடீனை தவிர, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதில் ப்ரோடீனை தவிர, பாதாமில் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் பி12, மாங்கனீஸ், மெக்னீசியம், காப்பர், பாஸ்பரஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.

இதை தினமும் சாப்பிடும் போது உடலுக்கு ஒரு சிறந்த உணவாகக் இது இருக்கும். பாதாமில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலின் செல்களை ஆக்ஸிடேடிவ் சேதத்திலிருந்து பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

வைட்டமின் ஈ -இன் சிறந்த ஆதாரமாக பாதாம் கருதப்படுகிறது. இது இதய நோய் மற்றும் அல்சைமர் போன்ற நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

பாதாமை சாப்பிடுவதால் உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பாதாம் பெரும் உதவியாக இருக்கும்.

இது நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை அளிக்கும். இதில் அதிக ப்ரோடீன் இருப்பதால், பாதாம் சாப்பிட்ட பிறகும் வயிறு நிரம்பியிருக்கும், மேலும் அவர்களின் கலோரி உட்கொள்ளலை குறைக்கிறது.

மற்றும் உடல் எடையை பராமரிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பாதாம் பயனுள்ளதாக இருக்கும். பாதாம் பருப்பை காலை அல்லது மதியம் சிற்றுண்டியாக சாப்பிடலாம். ஆனால் இதை ஒவ்வொரு நாளும் அளவுடன் சாப்பிட வேண்டும். இதை அதிகமாக சாப்பிட கூடாது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.