;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல் : வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து வெளியான தகவல்

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளைய தினத்தை (8) விசேட தினமாக அறிவித்து முன்னெடுக்கப்படும் என பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 11,12,13 மற்றும் 14 ஆம் திகதிகளிலும் வாக்காளர் அட்டை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்காளர் அட்டை
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிப்பதற்கான விசேட தினமாக நாளைய தினத்தை அறிவித்து அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையில் இந்தப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் தங்களது பகுதிகளுக்குப் பொறுப்பான அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.