;
Athirady Tamil News

நாமலின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த மாணவர்களால் பரபரப்பு

0

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தலைமையில் வெலிமடை நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பொம்மை துப்பாக்கியுடன் வந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பகஸ்தோவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் பாதுகாப்பிற்காக சுற்றுவட்டார காவல் நிலையங்களின் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.

மாணவர்கள் மீது சோதனை
இந்த சந்திப்பின் போது, ​​உவபரணகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை மாணவர் ஒருவரும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் கூட்ட மண்டபத்திற்குள் நுழைய முற்பட்டதையடுத்து, அம்பகஸ்தோவ காவல்துறையினரும் பண்டாரவளை விசேட குற்றப்பிரிவு காவல் அதிகாரிகளும் அவர்களை சோதனையிட்டனர்.

கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிப்பு
இளைஞர்களிடம் பிளாஸ்டிக் கைத்துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டு வெலிமடை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அம்பகஸ்தோவ காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.ரத்நாயக்க தெரிவித்தார்.

கூட்ட அரங்கில் பெற்றோர்கள் இருந்ததால் தாம் வீடு திரும்புவதாக தெரிவிக்கவே கூட்ட அரங்கிற்கு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டதாக வெலிமடை காவல்தறையினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.