;
Athirady Tamil News

20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கான வீசா கட்டுப்பாடுகளை நீக்கிய நாடு!

0

தன்சானியாவின் வீசா பரிந்துரை பட்டியலில் இலங்கை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான வீசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்கியுள்ளது.

பேச்சுவார்த்தை
தன்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பின்னரே இலங்கை பரிந்துரை வீசா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் தன்சானியாவிற்கு இணையம் வழியாக வீசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.