;
Athirady Tamil News

ரஷ்யா – உக்ரைன் பேரை இந்த நாடுகளால் நிறுத்த முடியும்! இத்தாலி பிரதமர்

0

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் இன்றுடன் 925 நாளாக நீடித்து வருகிறது. குறித்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பேச்சுவார்த்தை தொடர்பாக உக்ரைன் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிட வில்லை. இவ்வாறான நிலையில், இருநாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவால் முடியும் என்று இத்தாலி கூறியுள்ளது.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறுகையில்,

உக்ரைன் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு இந்தியா, சீனா போன்ற நாடுகளால் உதவ முடியும்.” என்றார்.

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நட்பு நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என்று புடின் கூறியிருந்த நிலையில், இத்தாலி பிரதமர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.