;
Athirady Tamil News

தடுப்புச் சுவரில் காா் மோதி விபத்து: தாய், மகள் உள்பட 3 போ் உயிரிழப்பு

0

செங்குன்றம் – திருவள்ளூா் சாலை அலமாதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தடுப்புச் சுவரில் காா் மோதிய விபத்தில், காா் ஓட்டுநா் மற்றும் தாய், மகள் உயிரிழந்தனா்.

காரில் பயணம் செய்த கணவரும், மற்றொரு மகனும் பலத்த காயமடைந்தனா்.

திருவள்ளூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயவேல் (52). இவரது மனைவி உஷாராணி (48). தம்பதிக்கு சாய் மோகித் (4), சாய் மோனிஷா (4) ஆகிய இரு குழந்தைகள். இருவரும் இரட்டையா் ஆவா்.

இந்த நிலையில் உஷாராணியின் தாய் வீடான சென்னை சிந்தாதிரிப்பேட்டைக்குச் செல்ல வாடகை காரில் 4 பேரும் திருவள்ளூரில் இருந்து பயணித்தனா். காா் செங்குன்றம் – திருவள்ளூா் சாலையில் உள்ள அலமாதி என்ற பகுதியில் வந்த போது சாலையில் இருந்த தடுப்புச் சுவரில் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் உஷாராணி (48), அவரது மகள் சாய் மோனிஷா (4), வாடகை காா் ஓட்டுநா் அனஸ் (30) ஆகிய 3 பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். ஜெயவேல், அவரது மகன் சாய் மோகித் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனா்.

தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று காயம் அடைந்த இருவரையும் மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்தில் உயிரிழந்த உஷாராணி, சாய் மோனிஷா, அனஸ் ஆகிய 3 பேரின் சடலங்களை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்துப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.