;
Athirady Tamil News

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் !

0

மத்திய சிரியாவின் (Syria) பல பகுதிகளில் இஸ்ரேல் (Israel) வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா (Gaza) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் (Iran) ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனான் (Lebanon) மற்றும் சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தநிலையில், மத்திய சிரியாவின் பல பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வான்வழி தாக்குதல்.
இந்த தாக்குதலில் 13 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் (Hamas) அமைப்பின் கூட்டாளியான ஹிஸ்புல்லா (Hezbollah) கடந்த 11 மாதங்களாக இஸ்ரேலியப் படைகளுடன் மோதி வருகிறது.

லெபனான் போராளிக்குழுவான ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை அனுப்ப ஈரானுக்கு சிரியா ஒரு முக்கிய வழி என்பதால் சிரியாவில் ஈரானிய ஆதரவு குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.