;
Athirady Tamil News

கமலா ஹரிஸ் இந்தியரான தன் தாத்தா குறித்து கூறியுள்ள கருத்து: உருவாகியுள்ள கடும் சர்ச்சை

0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியினரான கமலா ஹரிஸ், தன் தாத்தா குறித்து குறிப்பிட்டுள்ள ஒரு விடயம் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

கமலா ஹரிஸ் தன் தாத்தா குறித்து கூறியுள்ள கருத்து
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, அவர்களின் கீழ் பொலிசாராக பணியாற்றிய இந்திய பொலிசார், தங்கள் சொந்த மக்கள் மீதே நடத்திய பயங்கர தாக்குதல்களை யாராலும் மறக்கமுடியாது.

வடக்கே மகாத்மா காந்தி முதல், தெற்கே திருப்பூர் குமரன் வரை, ஆண் என்றும் பெண் என்றும் வித்தியாசம் பாராமல் சுதந்திரப் போராட்டத்துக்காக போராடியவர்களை லத்தியால் அடித்து துன்புறுத்தியவர்கள் அந்த பொலிசார்தான்.

ஆனால், சுதந்திரத்துக்குப் பின் அவர்கள் எங்கே போனார்கள் என்பதை பலரும் மறந்துபோனார்கள். அவர்கள் வேறெங்கும் செல்லவில்லை, அவர்கள் சுதந்திர இந்தியாவில் அப்படியே இந்திய பொலிஸ் துறையில் தொடர்ந்து பணியாற்றினார்கள்!

அதேபோல, பிரித்தானிய அரசில் அரசு அதிகாரிகளாக வெள்ளையர்களின் கட்டளைகளை நிறைவேற்றியவர்களும், சுதந்திரத்துக்குப் பின்பும், இந்திய அரசின் கீழ் அரசு அதிகாரிகளாகப் பணியைத் தொடர்ந்தார்கள்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹரிஸ், தன் தாத்தா இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்றதாக தெரிவித்துள்ள செய்தி சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

உருவாகியுள்ள கடும் சர்ச்சை
கமலாவின் தாத்தாவான PV கோபாலன், பிரித்தானியா இந்தியாவை ஆண்டபோது, பிரித்தானிய அரசின்கீழ் அரசு அதிகாரியாக பணியாற்றியவர்.

ஆனால், அவர் இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்றதாக கமலா தெரிவித்துள்ளார்.

ஆகவே, சமூக ஊடகத்தில் பலரும் அந்த கருத்திற்கு எதிரிப்பு தெரிவித்துள்ளார்கள். பிரித்தானிய அரசு அதிகாரியாக இருந்த ஒருவர் எப்படி பிரித்தானிய அரசை எதிர்த்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

வெண்ணெய் திரண்டுவரும்போது தாழி உடைந்தாற்போல, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலாவுக்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் உளறிக்கொட்டியுள்ளார் கமலா.

நீங்கள் சொல்வதெல்லாம் பொய், சொல்லப்போனால், நீங்கள் அமெரிக்கரே இல்லை. உங்கள் தாத்தா பாட்டியைக் குறித்து பொய்யாக டமாரம் அடிப்பதை நிறுத்துங்கள் என்கிறார் ஒருவர் கோபமாக!

You might also like

Leave A Reply

Your email address will not be published.