;
Athirady Tamil News

யாழில். குளிக்க சென்றவர் கிணற்றடியில் சடலமாக மீட்பு

0

கிணற்றில் குளிக்க சென்ற குடும்பஸ்தர் , கிணற்றடியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த செல்வராசா கார்த்தீபன் (வயது 35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனது தோட்டத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை வேலை செய்த பின்னர் , காலை வீட்டுக்கு வந்து குளிக்க செல்வதாக கூறி கிணற்றடிக்கு சென்றுள்ளார்.

குளிக்க சென்றவரை நீண்ட நேரமாகியும் காணாததால் அவரை அவரது மனைவி தேடி சென்ற போது , கிணற்றடியில் மூர்ச்சையற்று காணப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.