;
Athirady Tamil News

தெற்கு அதிவேக சாலையில் தீப்பிடித்து எரிந்த வாகனம்!

0

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவை இடமாறும் பகுதியில் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (10-09-2024) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாத்தறை நோக்கி பயணிப்பதற்காக கொட்டாவ இடமாற்றம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக வீதி தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் பிடித்த தீயை அணைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.