;
Athirady Tamil News

ஈராக்கில் அமெரிக்க இராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு !

0

ஈராக்கில் (Iraq) அமெரிக்க (America) இராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க இராணுவ தள வளாகத்தில் நள்ளிரவில் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian ) நேற்று (11) பாக்தாத்துக்கு (Baghdad) வர உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குண்டுவெடிப்பு
இந்தநிலையில், குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரான் ஆதரவு ஈராக்கிய போராளிகள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் தளங்களை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.