;
Athirady Tamil News

3 வயது மகனுடன் ரீல்ஸ் எடுத்த தம்பதி – ரயில் மோதி மூவரும் பலி!

0

தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுத்த தம்பதி குழந்தையுடன் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரீல்ஸ் மோகம்
உத்தரப்பிரதேசம், லஹர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அகமது(26). அவரது மனைவி நஜ்னீன்(24). இவர்களுக்கு 3 வயதில் அப்துல்லா என்ற மகன் இருந்தார்.

இந்நிலையில், உமாரியா கிராமத்தின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் இந்த தம்பதி மகனுடன் நின்றுகொண்டு சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.

மூவர் பலி
அப்போது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரெயில் அவர்கள் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர்.

உடனே, தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.