;
Athirady Tamil News

வருங்கால மன்னராக இருந்தாலும் பிள்ளைகளுக்கு ஒரு விடயத்தை வாங்கிக் கொடுக்க மறுக்கும் வில்லியம்

0

வில்லியம், கேட் தம்பதியர், வருங்கால மன்னர் ராணியாக இருந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு விடயத்தை மட்டும் வாங்கிகொடுக்க மறுத்துள்ளார்கள்.

அந்த விடயம் மட்டும் கிடையாது
வில்லியம் கேட் தம்பதியர் எவ்வளவு செல்வந்தர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

என்றாலும், தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு விடயத்தை மட்டும் வாங்கிக்கொடுக்க மறுத்துள்ளார்கள்.

அந்த விடயம், ஐபாட்!

ஆம், தங்கள் பிள்ளைகள், தானும் தன் மனைவியும் சிறு வயதில் வெளியே சென்று ஓடியாடி விளையாடியதுபோல விளையாடவேண்டும் என வில்லியம் எதிர்பார்க்கிறார்.

ஆகவே, பிள்ளைகளுக்கு ஐபாட் வாங்கிக்கொடுக்கவில்லை வில்லியம் கேட் தம்பதியர்.

தங்களிடம் ஐபாட் இருந்தாலும், அது பெரியவர்களுக்கானது என்று பிள்ளைகளிடம் கூறியுள்ளார்கள் வில்லியம் கேட் தம்பதியர்.

ஆனாலும், குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு வீடியோ கேம்ஸ் விளையாடுவது ரொம்ப பிடிக்குமாம். ஆகவே, அதைக் கட்டுப்படுத்துவது தங்களுக்கு கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் வில்லியம்.

என்றாலும், பிள்ளைகள் எவ்வளவு நேரம் வீடியோ கேம் விளையாடுவது என்பதை ஒழுங்குபடுத்த இன்னமும் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்களாம் வில்லியம் கேட் தம்பதியர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.