;
Athirady Tamil News

கொழும்பு தேசிய நூலகத்தில் பதற்றம்: ஜே.வி.பி ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு

0

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி அமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டமொன்றுக்கு ஜே.வி.பி ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின்யின் குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக குறித்த அமைப்பின் தேசிய உறுப்பினரான சட்டத்தரணி நுவன் பல்லந்துடாவ தெரிவித்துள்ளார்.

தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் பொது கூட்டமொன்று நேற்று (12) கொழும்பில் உள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

தாக்குதல்
அந்த கூட்டத்தில் ஜே.வி.பி தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டமையை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஒன்று உருவாகி சிலரால் தடிகளை கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தாக்குதலை நடத்தியது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின்யின் குழுவே என தேசபிரேமி ஜாதிக பெரமுன அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் தாக்குதலை நடத்திய குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.