;
Athirady Tamil News

காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: 42 பேர் பலி

0

காசாவின் (Gaza) கடற்கரையோரப் பகுதியைக் குறிவைத்து இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இந்த தாக்குதல் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 10-ஆம் திகதி தொடங்கிய காசா மீதான இஸ்ரேலின் போரில் 42,972 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வாழ்வாதார உதவி
ஹமாஸ் (Hamas) தலைமையிலான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,139 ஆகும், அதேசமயம் 200-க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

11 மாதங்களாக போர் நடந்துவருகிறது. காசாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், காசாவில் உள்ள 22 லட்சம் பலஸ்தீனர்களுக்கு அவசர உணவு மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது என்று உலக உணவுத் திட்டம் (WFP- The World Food Programme) அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.