;
Athirady Tamil News

நிலச்சரிவில் குடும்பத்தினர் 9 பேர் பலி; விபத்தில் காதலர் – இளம்பெண் வேதனை!

0

நிலச்சரிவில் குடும்பத்தினர் 9 பேரை இழந்த பெண்ணின் காதலனும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அன்று குடும்பம்..
கேரளாவில், கடந்த ஜூலை 30-ம் தேதி வயநாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த வரிசையில், நிலச்சரிவில் தனது மொத்த குடும்பத்தையும் இழந்து நின்றவர் ஸ்ருதி (24).

தனது குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேரை இழந்தார். கூடவே, புதிதாகக் கட்டப்பட்ட வீடு, மகளின் திருமணத்துக்காகப் பெற்றோர் சேர்த்துவைத்த ரூ.4 லட்சம் பணம், 15 சவரன் நகை ஆகியவையும் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.

இன்று காதலர்..
அப்போது ஸ்ருதி தனது உறவினர் வீட்டில் இருந்ததால் உயிர்பிழைத்தார். இதற்கிடையில் இவரது காதலன் ஜென்சனுடன் டிசம்பரில் திருமணம் செய்துவைக்கும் வகையில், நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, திருமணத்தை செப்டம்பரில் எளிமையாக நீதிமன்ற பதிவுத் திருமணமாக செய்துவைக்க ஜென்சனின் குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.

எனவே, ஸ்ருதி, ஜென்சன் மற்றும் அவரின் குடும்பத்தினர் ஆகியோர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளாகினர்.

இதில், ஸ்ருதியும், ஜென்சனின் குடும்பத்தினரும் காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால், ஜென்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.