;
Athirady Tamil News

யாழுக்கு வருகை தரும் ஜனாதிபதி

0

ஜக்கிய தேசிய கட்சியின் தொழில் நிபுணர் பிரிவுக்கான யாழ் மாவட்ட அமைப்பாளர் ராஜாராம் புருசோத்தமகுரு நேற்று யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பினை நடத்தியிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொழில் முயற்சியாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (14) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி தனியார் விடுதி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கலந்துரையாடல்களிலும் பொதுக் கூட்டமொன்றிலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.