;
Athirady Tamil News

அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! 8 பேர் உயிரிழப்பு! பலர் கவலைக்கிடம்

0

இந்தியாவில் அந்திர மாநிலத்தில் அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்ததுடன் 33க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் அந்திர மாநிலம் சித்தூரில், நேற்றைய தினம் (13-09-2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சித்தூர் – பெங்களூரு நெடுஞ்சாலையில் திருப்பதியில் இருந்து பெங்களூரு சென்ற அரச பேருந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 33க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.