;
Athirady Tamil News

புதிய பாடசாலை தவணை – கல்வி அமைச்சினால் விசேட அறிவிப்பு

0

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை குறித்து கல்வி அமைச்சினால் (Ministry of Education) விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், 2025 புதிய பாடசாலை தவணை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. (A/L) Exam) நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை
இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை நாளை 15 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amit Jayasundara) தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323,879 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளதுடன் அவர்கள் நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் நாளை (15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை பரீட்சை நிலையங்களைச் சுற்றி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.