;
Athirady Tamil News

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் இடம்பெறவுள்ள எம்.பிக்கள் : வெளியான அறிவிப்பு

0

தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங்கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால அமைச்சரவை
வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்துவதற்கு தனது கட்சி முயலும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாங்கள் இலங்கை அரசாங்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம் சிங்கள அரசாங்கத்தையில்லை எனவும் அரசாங்கம் சாராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கும் முதலாவது அமைச்சரவையாக இது காணப்படும் என கூறியுள்ளார்.

222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் வடக்கு, கிழக்கு மலையகத்தை சேர்ந்த சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அவர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.