;
Athirady Tamil News

மூன்று அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு : முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

0

மூன்று அரசியல் கட்சி அலுவலகங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

மீரிகம (Mirigama), பொகலகம (bokalagama) பிரதேசத்தில் இரண்டு கட்சி அலுவலகங்களும் திவுலபிட்டிய (Divulapitiya) கித்துல்வல (Kithulwala) பிரதேசத்தில் உள்ள கட்சி அலுவலகமுமே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல (Pallewela) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கித்துல்வல கிந்தம்மாமன சந்தியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் ஒன்றின் பெயர் பலகைகள் தீயினால் சேதமடைந்துள்ளதுடன், ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹெய்டிவல கிராமத்தில் உள்ள அலுவலகத்தின் பெயர் பலகைகளும் தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு விண்ணப்பதாரர்
குறித்த இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு விண்ணப்பதாரர் அலுவலகத்தின் பெயர்ப்பலகைகளும் எரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெய்டிவால பகுதியில் இரண்டு எரிக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் கையால் எழுதப்பட்ட சில சுவரொட்டிகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், அவை காவல்துறையினர் விசாரணையை தவறாக வழிநடத்தும் முயற்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அலுவலகம் ஒன்றின் அருகே விழுந்து கிடந்த தீப்பெட்டியும் காவல்துறையினர் காவலில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.