;
Athirady Tamil News

வவுனியாவில் தந்தையால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமி

0

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தந்தை மற்றும் இளைஞர் ஒருவரால் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இன்று (14.09) சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக அவர்களுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்ட பொலிசார் குறித்த சிறுமியிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

சிறுமியின் வாக்குமூலம்
இதனையடுத்து சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் சிறுமி தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

விசாரணைகளின் போது கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் குறித்த சிறுமியை தந்தை தவறான நடத்தைக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவரும் கடந்த மாதம் 28 ஆம் திகதி குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், இளைஞரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தந்தை தனது மூத்த மகளை 2020 ஆம் ஆண்டு தவறான நடத்தைக்கு உட்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டு அது தொடர்டபான வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.