;
Athirady Tamil News

சிறுவர்களின் விளையாட்டு : பற்றியெரிந்த ரஷ்ய இராணுவ உலங்குவானூர்தி

0

பாடசாலை மாணவர்கள் இருவர் செய்த செயலால் ரஷ்யா(russia)வின் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று முழுமையாக அழித்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த செவ்வாய்க்கிழமை 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு மாணவர்கள் ரஷ்யாவின் Noyabrsk விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ 122 கோடி மதிப்பிலான உலங்கு வானூர்திக்குள் நுழைந்து விளையாடியுள்ளனர்.

எரியக்கூடிய திரவத்தை ஊற்றியுள்ளனர்
அங்கு அவர்கள் எரியக்கூடிய திரவத்தை ஊற்றியுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் சிகரெட்டைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் அந்த உலங்கு வானூர்தி கொழுந்துவிட்டெரிந்துள்ளது. உலங்கு வானூர்தியில் எரியக்கூடிய திரவத்தை ஊற்றியதன் பின்னர், சிகரெட் புகைக்க முடிவு செய்துள்ள அவர்கள் இருவரும், பின்னர் அந்த சிகரெட்டை உலங்கு வானூர்திக்குள் வீசியுள்ளனர். இதன் பின்னரே உலங்கு வானூர்தி வெடித்துள்ளது.

இதனையடுத்து சிறார்கள் இருவரையும் கைது செய்துள்ள அதிகாரிகள், அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிறார்கள் இருவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தமாக சேதமடைந்த உலங்கு வானூர்தி
மேலும், உலங்கு வானூர்தி மொத்தமாக சேதமடைந்துள்ளது. ஆனால் உலங்கு வானூர்தியை சேதப்படுத்த எவரேனும் அந்த சிறுவர்கள் இருவரையும் தூண்டினார்களா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தொடர்புடைய சிறார்கள் இருவருக்கும் 5 மில்லியன் ரூபிள் தொகை சன்மானம் அளிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.