;
Athirady Tamil News

யாழில் 20 வருடங்கள் பழமையான சிலையின் தலை துண்டிப்பு

0

யாழில் (jaffna) திருநாவுக்கரசு நாயனார் திருவுருவச்சிலை ஒன்று சமூக விரோதிகளால் தலை துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் உள்ள சுமார் 20 வருடங்கள் பழமை வாய்ந்த சிலையே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் முறைப்பாடு
இது தொடர்பாக பாடசாலை சமூகத்தினர் கோட்டக்கல்வி அலுவலகத்தினரிடமும் வலயக் கல்வி அலுவலகத்தினரிடமும் அறிவித்து கொடிகாமம் காவல் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு கல்லூரியின் பழைய மாணவனால் இலவசமாக நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்பாக வழங்கிய திருவுருவச்சிலையானது இடித்து சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.