;
Athirady Tamil News

அச்சுறுத்தலுக்கு பயப்பட முடியாது… அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ஈரான் பதிலடி

0

சர்ச்சைகளைத் தீர்க்க எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும், அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் பயப்படப் போவதில்லை என ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணை
குறித்த தகவலை அரசாங்க செய்தி ஊடகம் ஒன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. ரஷ்யா விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் மூன்று ஐரோப்பிய நாடுகள் ஈரான் விமான சேவைக்கு தடை விதித்துள்ள நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு தயார் என குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வழங்கியதாக வெளியான தகவலை அடுத்து, ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறையை இலக்காகக் கொண்டு புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க,

ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதை அடுத்தே ஈரானின் வெளிவிவகார அமைச்சர் Abbas Araqchi தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.

ஈரான் தனது சொந்த பாதையில் பலத்துடன் தொடர்கிறது என குறிப்பிட்டுள்ள அமைச்சர், இருப்பினும் நாங்கள் எப்போதும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிப்போம் என்றார்.

பிரச்சினைக்கு தீர்வாகாது
ஆனால் பேச்சுவார்த்தைகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தத்தின் அடிப்படையில் அல்ல என்றும் அமைச்சர் Abbas Araqchi குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஷ்யாவுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வழங்கியதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ள அமைச்சர், அமெரிக்கா மற்றும் மூன்று ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது விதித்த பொருளாதாரத் தடைகள் என்பது பிரச்சினைக்கு தீர்வாகாது என்றார்.

அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈரான் மீது செவ்வாய்க்கிழமை புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதில் ஈரான் விமான சேவை நிறுவனமும் உட்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.