;
Athirady Tamil News

லண்டனில் பெண் மீது கத்திக்குத்து தாக்குதல்: சந்தேகத்திற்குரிய 32 வயது பெண் கைது!

0

கிழக்கு லண்டன் பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் கத்திக்குத்து
கிழக்கு லண்டனில் நிகழ்ந்த கத்திக்குத்து கொலை சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயது மதிப்புள்ள பெண் ஒருவர், டவர் ஹாம்லெட்ஸில்(Tower Hamlets), டக்கெட் தெருவில்(Duckett Street) உள்ள வீட்டில், ஞாயிறு காலை 1:17 மணிக்கு கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைகள் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை வழங்கினர், இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

இருவர் கைது
இதையடுத்து, 32 வயதான பெண் ஒருவர் கொலை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், 37 வயதான ஆண் ஒருவர் குற்றவாளியை உதவியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் முன்னதாக அந்த வீட்டில் இருந்ததாகவும், ஒருவரையொருவர் அறிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் தற்போது வேறு யாரையும் தேடவில்லை என்றும், விசாரணைக்கு உதவும் தகவல்கள் இருந்தால் பொதுமக்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் துணை காவல் ஆணையர் பென் டல்லோவே கேட்டுக் கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.