;
Athirady Tamil News

கடவுச்சீட்டுக்கான கட்டுபாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ள ஜேர்மனி

0

ஜேர்மனியின் (Germany) அனைத்து எல்லைகளிலும் கடவுச்சீட்டு கட்டுப்பாடுகளை இன்று (16) முதல் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கட்டுப்பாட்டு நடவடிக்கையானது புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரை ஜேர்மனியின் கிழக்கு மற்றும் தெற்கு நில எல்லைகளில் மட்டும் பாதுகாப்பு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஜேர்மனியின் அனைத்து எல்லைகளிலும் கடவுசீட்டு கட்டுப்பாடுகளை நீட்டிக்க இருப்பதாக ஜேர்மன் உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் (Nancy Fraser) தெரிவித்திருந்தார்.

மேற்கு எல்லைகள்
ஜேர்மனியில் ஏற்கனவே புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், விசா இல்லாமல் ஜேர்மனிக்குள் நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், குறைந்தபட்சம் அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜேர்மனியின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகள் வழியாக ஜேர்மனிக்குள் நுழைவோரை சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜேர்மனியானது டென்மார்க் (Denmark), நெதர்லாந்து (Netherlands), பெல்ஜியம் (Belgium), லக்ஸம்பர்க் (Luxembourg), பிரான்ஸ் (France), சுவிட்சர்லாந்து (Switzerland), ஆஸ்திரியா (Austria), செக் குடியரசு (Czechia) மற்றும் போலந்து (Poland) ஆகிய நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.