;
Athirady Tamil News

2025ஆம் ஆண்டு முதல்… சர்வதேச மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

0

பிரித்தானியாவுக்கு கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்கள், தாங்கள் கல்வி கற்கும் காலத்தில், தங்கள் செலவுகளை தாங்களே சந்தித்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையை தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டும்.

அந்த தொகை தற்போது அதிகரிக்கப்பட உள்ளது.

2025ஆம் ஆண்டு முதல்…

2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல், லண்டனில் பயிலும் சர்வதேச மாணவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் 1,483 பவுண்டுகள் வைத்துள்ளதை நிரூபித்துக்காட்டவேண்டும்.

லண்டனுக்கு வெளியே, அதாவது, வேறு நகரங்களில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்கள், தங்கள் வங்கிக்கணக்கில் 1,136 பவுண்டுகள் வைத்துள்ளதை நிரூபித்துக்காட்டவேண்டும்.

தற்போது இந்த தொகை லண்டனில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு 1,334 பவுண்டுகளாகவும், லண்டனுக்கு வெளியே, அதாவது, வேறு நகரங்களில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கு 1,023 பவுண்டுகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.