;
Athirady Tamil News

ரணிலுடன் இணையுமாறு மகிந்தவிடம் தேரர் கோரிக்கை

0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நாமல் ராஜபக்சவை (Namal Rajapaksa) விலக்கிக் கொள்ளுமாறு தொடம்பஹல ராகுல தேரர் மகிந்த ராஜபக்சவிடம் (Mahinda Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) கட்சியின் ஆதரவை வழங்குமாறும் தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் (colombo) நேற்று (16) இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவிடம் கோரிக்கை
சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கான மாநாடு இன்று பிற்பகல் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்றது.

இதன்போது, தற்போதைய சூழ்நிலையில் இந்த நாட்டை வழிநடத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நாமல் ராஜபக்சவை விலக்கிக் கொள்ளுமாறும், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்குமாறும் மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.